இலங்கை Subscribe to இலங்கை
நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து IMF எச்சரிக்கை
நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பணவீக்க வீதம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலை நீடிக்கின்றது – சீ.பி.ஜே
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை நீடித்து வருவதாக ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை பிரயோகிப்போர் தண்டிக்கப்படாத நிலை காணப்படும் நாடுகளின் தர வரிசையொன்றை அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் அமைப்பு… Read more
ஆட்சி கிட்டும்வரை போராட வேண்டும்
தமிழ் மக்கள் தமது நிலப் பிரதேசத்தை ஆட்சி செய்கிற அதிகாரம் கிடைக்கும் வரைக்கும் போராடியே ஆகவேண்டும் என்று மே தினத்தில் அறைகூவல் விடுத்துள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
காணி,பொலிஸ் அதிகாரத்தை பறிக்காவிட்டால் என்னைப் பறிகொடுக்கவேண்டிவரும் – விமல் வீரவன்ச எச்சரிக்கை
மாகாணசபைகளின் காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பறித்துக் கொள்ளாமல், வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால் அரசில் இருந்து விலகுவேன் என சிறிலங்கா அமைச்சர் விமல் வீரவன்ச எச்சரித்துள்ளார்.
பௌத்த தலிபான்வாதம் உருவாகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது – காலி பேராயர்
நாட்டில் பௌத்த தலிபான்வாதம் உரவாகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக காலி பேராயர் ரேய்மன்ட் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பொதுபல சேனா அமைப்பு போன்ற சிங்கள பௌத்த அமைப்புக்களினால் சிறுபான்மை மக்கள் மீது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சேது சமுத்திரத் திட்டம் முன்னெடுக்கப்படக் கூடாது – தமிழக அரசு
சேது சமுத்திரத் திட்டத்தை முன்னெடுக்கக் கூடாது என தமிழக மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய உச்ச நீதிமன்றிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்திய ஜனதா கட்சியின் தலைவர் சுப்ரமணியம் சுவாமி தாக்கல் செய்த மனு ஆராயப்பட்ட சந்தர்ப்பத்தில், நீதிமன்றத்திற்கு விடயங்களை தெளிவுபடுத்திய… Read more
சிறிலங்காவுக்கான நிதியுதவியை விலக்கிக் கொண்டது அமெரிக்கா
சிறிலங்காவின் நீதித்துறையை மேம்படுத்துவதற்காக வழங்கப்பட்ட 450 மில்லியன் ரூபா நன்கொடை நிதியை அமெரிக்கா மீளப் பெற்றுள்ளது.
எடிசனும் புலம்பெயர் தமிழருமே மின்கட்டண உயர்வுக்குக் காரணம்; அரசு இப்படியும் சொல்லும் என்கிறார் ரணில்
“மின்குமிழை உலகுக்கு அறிமுகப்படுத்திய தோமஸ் அல்வா எடிசனும் புலம் பெயர் தமிழர்களுமே மின் கட்டண அதிகரிப்புக்குக் காரணம் என அரசு கூறும் காலம் வெகு தொலைவிலில்லை” என்று எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சிறிலங்கா மீது நேரடியாக அழுத்தம் கொடுக்கப்படும் – அமெரிக்கா
சிறிலங்கா மீது அமெரிக்கா நேரடியாக அழுத்தங்களைக் கொடுக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பதில் பிரதிப் பேச்சாளர் பற்றிக் வென்ரெல் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்விவகாரங்களில் ஏனைய நாடுகள் தலையீடு செய்ய முடியாது; பீரிஸ் திட்டவட்டம்
இலங்கையின் உள் விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிடுவது எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.





