நாட்டின் பொருளாதார நிலைமைகள் குறித்து சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பணவீக்க வீதம் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதங்களுடன் ஒப்பீடு செய்யும் போது பொருட்களுக்கான விலைகள் ஏப்ரல் மாதத்தில் குறைந்தளவே உயர்வடைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது. எனினும், பணவீக்கம் உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது,
நிதிக்கொள்கை தொடர்பான நிபந்தனைகளை அரசாங்கம் வலுவாக பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.மின்சாரக் கட்டண உயர்வு ஒட்டுமொத்த நாட்டின் பொருளாதாரத்தையுமே பாதிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
-GTN