இலங்கை Subscribe to இலங்கை
முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா உட்பட இராணுவ நீதிமன்றத்தால் 5,726 பேர் தண்டிக்கப்பட்டனர்- அமைச்சர் தினேஸ் குணவர்த்தன
2006ஆம் ஆண்டு முதல் 421 படை அதிகாரிகளும் 5205 படை வீரர்களும் இராணுவ நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டார்கள் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்திற்கும் இராணுவத்திற்கும் தொடர்பில்லை!- இராணுவ பேச்சாளர்
கிழக்கு மாகாணத்தில் இந்து ஆலயங்களில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு கிடையாது என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!
நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவிவருவதால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை நீதிபதி ஜ.நா விசாரணை குழுவில் இருந்து விலகல்! விசாரணைகளை பதவி விலகல் பாதிக்காது- ஜ.நா
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழாமொன்றிலிருந்து இலங்கை நீதிபதி ஒருவர் விலகிக் கொண்டுள்ளார்.
புலிகள் மீண்டும் வரலாம் என்ற அச்சத்தில் இலங்கை; அமெரிக்காவின் அறிக்கை கூறுகிறது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகலாம் என்ற அச்சம் காரணமாகவே சிவில் பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர இலங்கை அரசு பின்னடிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட 2012ஆம் ஆண்டுக்கான பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பான அறிக்கையிலேயே… Read more
தன்னை சீரழித்த இராணுவச் சிப்பாயை அடையாளம் காட்டிய 7 வயது சிறுமி
வவுனியா நெடுங்கேணியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபரை, பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளியன்று (7) நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியுள்ளதாகப் பொலிசார் தெரிவத்துள்ளனர்.
தமிழரசுக் கட்சி சுமந்திரனுக்கு நேரமில்லையாம்! சிவில் சமூகத்திற்கும் ஆப்படிக்கும் தமிழரசு கட்சி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு நேரம் இன்மை காரணமாக சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனான சந்திப்பில் கலந்து கொள்ளமுடியாது என்று கூட்டமைப்பு அறிவித்தனால் சந்திப்பு இடம்பெறாது என்று அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் கடை உடைத்து 500,000 ரூபாய் பெறுமதியான பொருட்கள் திருட்டு
வவுனியா கொறவப் பொத்தானை வீதியில் உள்ள பலசரக்கு கடையினை உடைத்து 500,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன்
எப்படி வந்தன? நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் இருந்து வெடி குண்டுகள் மீட்பு!
அம்பாறை – மஹாஓயா பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கு இடமான லொறியை சோதனை செய்தபோது அதில் இருந்து ஒரு தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
தங்க கட்டிகளுடன் வந்த அமெரிக்க பிரஜை கட்டுநாயக்காவில் கைது!
25 இலட்சம் பெறுமதியான தங்கக் கட்டிகளுடன், அமெரிக்கப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.