இலங்கை Subscribe to இலங்கை

வெளிநாட்டில் இருந்து வந்தவரின் மரணத்தில் சந்தேகம்! முறைப்பாட்டையடுத்து பொலிசார் விசாரணை!
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெளிநாட்டில் இருந்துவந்த ஒருவர் 10 நாட்களில் இறந்தது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

எமக்கும் நியமனம் வழங்குங்கள் என வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த அடிப்படையில் வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாம் சிற்றூழியர்களாக பணியாற்றும் போதிலும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாது புதியவர்களுக்கு நியமனம் வழங்குவதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

704 அரச உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது
வன்னி பிராந்தியத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கிளல் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 704 பேருக்கு இன்று (8.6) வவுனியா நகரசபை மண்டபத்தில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டன.

இந்து ஆலயங்கள் மீது தொடரும் அடாவடி! விநாயகர் ஆலய கோபுரத்தின் 13 பாவைகள் இனந்தெரியாதோரால் உடைப்பு!
திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியில் உள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கோபுரத்தில் 13 பாவைகள் இனம்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கலாம் என்றும் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஆலய பரிபாலனசபையின் செயலாளர் எ.நடராசா தெரிவித்தார். இதேவேளை… Read more

தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்கு இந்தியா எந்தக் கோலை பயன்படுத்தியது? தமிழ் மக்களை ஏமாற்றுவதாக சாடுகிறார் அரியம் எம்.பி
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவதற்கான மந்திரக்கோல் தங்களிடமில்லை என்று கூறும் இந்தியா தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்தொழிப்பதற்கு எந்தக் கோலை பாவித்திருந்தது? யுத்தத்தினை அழித்தவர்கள் தீர்வினை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற… Read more

அந்தரங்க உறுப்புகளில் மிளகாய் தூளை கொட்டி விசாரணை செய்யும் இலங்கை பொலிஸ்!- ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கை பொலிஸ் விசாரணைகளின்போது, மிளகாய் பொடியை கண்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் கொட்டுதல் போன்ற மோசமான சித்திரவதை முறைகளைக் கையாள்வதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டுகிறது.

இலங்கையின் இரண்டு வங்கிகளில் புலிகளின் 86 மில்லியன் ரூபாவை ரெஜி வைப்பிலிட்டுள்ளார் – அரசாங்கம்
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இலங்கையில் உள்ள இரண்டு வங்கிகளில் 86 மில்லியன் பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது என திவயின கூறியுள்ளது.

கடும் காற்றினால் மீனவர்கள் மாயம்! மூன்று சடலங்கள் மீட்பு! மீனவர்களை மீட்டுத்தர கோரி போராட்டம்
பலபிட்டி கடற்பரப்பில் 20 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 3 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் பயணித்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாகவும் தத்தளித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பலபிட்டி மற்றும் பெந்தர கடற்பரப்பில் இவ்வாறு மீனவர்களின்… Read more

அரசுடன் சேர்ந்தியங்கும் ஈபிடிபியும் 13வது திருத்தம் தொடர்பாக ஆராய குழு அமைப்பு
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை கொண்டுவரவிருக்கும் அரசாங்க யோசனைகளை பரிசீலிப்பதற்காக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது.

மட்டக்களப்பில் பஸ் சில்லில் சிக்கி 2 வயது குழ்தை பலி
பஸ்ஸின் சில்லில் சிக்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.