கடும் காற்றினால் மீனவர்கள் மாயம்! மூன்று சடலங்கள் மீட்பு! மீனவர்களை மீட்டுத்தர கோரி போராட்டம்

fishing2பலபிட்டி கடற்பரப்பில் 20 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 3 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் பயணித்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாகவும் தத்தளித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பலபிட்டி மற்றும் பெந்தர கடற்பரப்பில் இவ்வாறு மீனவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு மீன்பிடிக்கச் சென்ற பல மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று அதிகாலை வீசிய கடும் காற்றில் இவர்கள் காணாமல் போயுள்ளனர்.

இதேவேளை, பேருவளை கடற்பரப்பில் மற்றுமொரு மீனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தவிர காணாமல் போன மீனவர்களை மீட்டுத்தரக்கோரி தெகிவளையில் போராட்டம் இடம்பெற்று வருகிறது. இதனால் ரயில் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,