704 அரச உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது

function
வன்னி பிராந்தியத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கிளல் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 704 பேருக்கு இன்று (8.6) வவுனியா நகரசபை மண்டபத்தில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டன.

கணிதம், விஞ்ஞானம், ஆங்கிலம் ஆகிய பாடங்களுங்ககான பட்டதாரிகளுக்கான ஆசிரிய நியமனம், கல்விசார உத்தியோகத்தர்களுக்கான நியமனம், சுகாதார மற்றும் விவசாய திணைக்களங்களில் சிற்றூழியர்களுக்கான நியமனங்களே இவ்வாறு வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாரூக், வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி, கல்வி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ஜெயரட்ன, வட மாகாண பிரதம செயலாளர் ர. விஜயலட்சுமி, வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர, சிறிடெலோ கட்சியின் செயலாளர் ப. உதயராசா, ஜனாதிபதியின் இணைப்பாளர்களான ச. கனகரட்னம், சி. கிசோர், பி. சுமதிபால உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இலங்கையி

Tags: ,