புலிகள் மீண்டும் வரலாம் என்ற அச்சத்தில் இலங்கை; அமெரிக்காவின் அறிக்கை கூறுகிறது

USA flag
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகலாம் என்ற அச்சம் காரணமாகவே சிவில் பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர இலங்கை அரசு பின்னடிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட 2012ஆம் ஆண்டுக்கான பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பான அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் தற்போதும் ஆயுதங்களைக் கைப்பற்றி வருவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்து விட்டாலும் ஆயுதங்களும், வெடிபொருள்களும் மீட்கப்பட்ட வண்ணமே உள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கடந்த வருடம் நவம்பர் மாதம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தை மாணவர்கள் கொண்டாடும் மாதமாகப் பேரணி நடத்தினர்.

பேரணியின் போது 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டனர். புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் இயங்கிக்கொண்டிருக்கின்றனர் என்று இலங்கை அரசு கருதுகிறது.

வெளிநாடுகளில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்ட பலர் பணம் அனுப்பி வருகின்றமை குறித்தும் அக்கறை செலுத்தி வருகின்றது.

அத்துடன் புலிகளின் சர்வதேச பொருளாதாரத்øத் தடுப்பதற்குப் பல வழிகளில் இலங்கை அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த நிலையில் மீண்டும் விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாகலாம் என அச்சமடைந்து முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளை இலங்கை அரசு தீவிரப்படுத்தி வருகின்றது என்றுள்ளது.

Tags: , ,