இலங்கை Subscribe to இலங்கை
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு… ஈழம் இன்று!
“நாம் நமது தாய்நாட்டைப் பிரிவினைவாதப் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்து முழுமையாக விடுவித்துள்ளோம். இலங்கையின் ஒவ்வோர் அங்குல நிலத்தினுள்ளும் இப்போதிருந்து நடைமுறையில் இருப்பது மேன்மைமிக்க சட்டத்தின் ஆட்சிதான்.
சனல்4 காணொளியை ஏற்றுக் கொள்ள முடியாது; இலங்கை அறிவிப்பு
இலங்கை மீது போர்க்குற்றம் சுமத்தி சனல் போ தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி ஏற்றுகொள்ள முடியாது என ஐரோப்பிய ஒன்றியத்துக்கான இலங்கைத் தூதுவர் பி.எம்.அம்சா தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு விவகாரங்களில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக் கொள்ளப் போவதில்லை – கோதபாய
பாதுகாப்பு வவிகாரங்களில் எவ்வித இணக்கப்பாடும் ஏற்படுத்திக்கொள்ளப் போவதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண குடாநாடு மற்றும் வன்னியில் இராணுவத்தினரின் பிரசன்னமானது மக்களின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தியே காணப்படுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு இலங்கை ஆக்கிரமிக்கப்பட்ட தனிநாடு அங்குள்ள தமிழ் மக்கள் அடிமைகள் : ஜே.வி.பி.
வடபகுதி இலங்கையால் ஆக்கிரமிக்கப்பட்டு தனிநாடு என்ற மனோபாவத்திலும் அங்குள்ள தமிழ் மக்கள் தமது அடிமைகள் என்ற மமதையிலுமே அரசாங்கம் தனது நடவடிக்கைகளை அங்கு முன்னெடுக்கின்றது என்று ஜே.வி.பி.யின் அரசியல் சபை முக்கியஸ்தரும் எம்.பி.யுமான அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என பிரித்தானியா, இலங்கைக்கு எச்சரிக்கை
விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என பிரித்தானியா இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேசத்தின் கோரிக்கைகளை தொடர்ந்தும் இலங்கை உதாசீனம் செய்தால் பாதக விளைவுகள் ஏற்படக் கூடுமென பிரித்தானியாவின் பிரதிப் பிரதமர் நிக் கெலக் தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பு இல்லாத தேர்தல் களம் மணமக்கள் இல்லாத திருமணம் போன்றது; மனோகணேசன்
பொலிஸ், காணி அதிகாரங்கள் இல்லாத வடமாகாண சபைத் தேர்தலுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடும் என்று நான் நம்பவில்லை. கூட்டமைப்பு இல்லாத தேர்தல் களம் மணமக்கள் இல்லாத திருமணம் போன்றது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
ராவயவின் பார்வையில் வடக்கின் தேர்தல்கள்
வட மாகாணத் தேர்தலை எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடத்தவிருப்பதாக ஜனாதிபதி அவர்கள் பல தடவைகள் கூறி வந்துள்ளார். ஜனநாயகத்தை பாதுகாத்தல் தொடர்பில் அது முக்கிய விடயமாகும்.
யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்துமாறு AI, ஐ.நா மனித உரிமைப் பேரவையிடம் மீண்டும்
யுத்தக் குற்றச் செயல்கள் n;தாடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையிடம் எழுத்து மூலம் மீண்டும் கோரியுள்ளது.
வடக்கு மக்கள் புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளதாம்; பசில் ராஜபக்ச
வடக்கு மக்கள் தமது புத்தியை பாவித்து நடந்துகொள்ளும் காலம் வந்துள்ளதாக பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புயலுக்கு மகாசேன மன்னன் பெயரா? ராவணா சக்தி அமைப்பு எதிர்ப்பு
இலங்கையின் கிழக்கு கடலுக்கு அருகில் நிலை கொண்டுள்ள புயல் சின்னத்திற்கு மகாசேனன் என்ற பெயரை பயன்படுத்துவதற்கு ராவணா சக்தி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.





