Author Archives: rajharan
முன்னாள் பயங்காரவாத புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவர் சிறையில்!
15 வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பயங்கரவாத புலனாய்வு பிரிவைச்சேர்ந்த ஓய்வுபெற்ற உதவிப்பொலிஸ் அத்தியட்சகரை யூன் 17 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறைச்சாலை நிலத்தை விற்பனை செய்யவுள்ளதால் வெலிக்கடை சிறைச்சாலை கொழும்புக்கு வெளியே செல்கிறது!
வெலிக்கடை சிறைச்சாலையை கொழும்புக்கு வெளியே பாதுக்கைக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடமை செய்யும் பொலிசாருக்கு தாக்குதல் நடத்தினால் உடனடியாக நடவடிக்கை
கடமையை செய்யும் பொலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் அவ்வாறு தாக்குதல்களை நடத்துவோருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளது.
13 வது திருத்தச் சட்டத்தில் மாற்றம் இப்போதைக்கு இல்லை! மாற்றம் செய்யில் இந்தியாவின் ஆலோசனை பெறப்படும்- கெஹலிய ரம்புக்வெல
13ஆவது திருத்தச் சட்டத்தில் ஏதேனும் திருத்தங்கள் கொண்டுவருதாயின் இந்தியாவின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படும் என ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
மட்டு. புத்தர்சிலை விவகாரம், இந்து ஆலயங்களில் இடம்பெற்ற திருட்டு தொடர்பாக பிரான்ஸ் தூதுவரிடம் முறைப்பாடு- யோகேஸ்வரன் எம்.பி.
மட்டக்களப்பு நுழைவாயிலில் புத்தர் சிலை நிர்மாணிப்பதற்கு எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்தும், இந்து ஆலயங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்படும் சம்பவங்கள் தொடர்பிலும் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிரிஸ்ரின் ரொபின்சனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் விளக்கிக் கூறியுள்ளார்.
வடக்கில் ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் வாக்களிக்க முடியாத நிலை- பவ்ரல்
”வட மாகாணத்தில் சுமார் ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் அடையாள அட்டையில்லாத காரணத்தினால் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளனர்” என்று பப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.
லண்டன் இலங்கைத் தமிழர் சென்னையில் கடத்தல்!
இலங்கையைச் சேர்ந்தவர் தம்பதிகள் இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனக்கு தானே தீமூட்டி கிணற்றுக்குள் குதித்து இளம் பெண் தற்கொலை- யாழில் சம்பவம்
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இளம் பெண் ஒருவர் தனக்கு தானே தீவைத்து கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அழைத்துச் சென்று வைத்திருந்தவர் கைது
திருமணம் செய்வதற்காக சிறுமி ஒருவரை அழைத்துச் சென்று தனது வீட்டில் தங்க வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆயுதம் ஏந்தியிருந்த டக்ளஸ் தேவானந்தா வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு எல்லாம் நிறைந்த மாகாண சபையாக கொடுக்கப்பட்ட போது ஆயுதத்தை விடுத்து ஜனநாயகத்திற்கு வந்தவர்- அமைச்சர் ரிசாட் பதியுர்தீன்
ஆயுதம் ஏந்தியிருந்த டக்ளஸ் தேவானந்தா வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டு எல்லாம் நிறைந்த மாகாண சபையாக கொடுக்கப்பட்ட போது ஆயுதத்தை விடுத்து ஜனநாயகத்திற்கு வந்தவர் என்பதனை அனைவரும் சிந்திக்க வேண்டும் என வர்த்தக மற்றுமும் கைத்தொழில் அமைச்சர் ரிசாட் பதியுர்தீன் தெரிவித்துள்ளார்.





