Author Archives: rajharan
அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது விநாகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை
விடுதலைப் புலிகள் தொடர்பில், பிரதி அமைச்சர் விநாகமூர்த்தி முரளிதரன் விடுத்துள்ள கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க அதிகாரிகளை விசாரணைக்கு அழைக்கிறது அரசாங்கம்
அமெரிக்க தகவல் நிலையத்தை அமைப்பது தொடர்பாக, திருகோணமலை நகரசபையுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்பாடு குறித்து, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரக அதிகாரிகளிடம் விளக்கம் கோர சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புதுடில்லியில் விரைவில் ஈழத்தவர் ஆதரவு ஆட்சி; இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பாண்டியன் உறுதி
புதுடில்லியில் விரைவில் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான ஆட்சி நிச்சயம் அமையும். எதிர்வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அது வெளிப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்புச் செயலாளர் பதவியை இராஜினாமா செய்து விட்டு கோத்தபாய அரசியல் பேசவேண்டும் :சுரேஷ்
13ஆவது திருத்தச் சட்டம் குறித்தோ காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பிலோ கருத்துக்கூறுவதற்கு பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு அதிகாரம் இல்லை.
ஹீத்ரோ விமான நிலைய ஓடுபாதைகள் அவசரமாக மூடப்பட்டன
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானமொன்று அவசரமாக தரையிறங்கியதை அடுத்து லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் இரண்டு ஓடுபாதைகளும் முன்னதாக மூடப்பட்டிருந்தன.
55 அதி சொகுசு மேர்சிடீஸ் பென்ஸ் ரக வாகனங்கள் இறக்குமதி
55 அதி சொகுசு மேர்சிடீஸ் பென்ஸ் ரக வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை முன்னிட்டு அதி சொகுசு ரக கார் வகைகளில் ஒன்றாகக் கருதப்படும் மேர்சிடீஸ் பென்ஸ் ரக கார்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
சர்ச்சையை உருவாக்கியுள்ள லண்டன் வூலிச் கொலைச் சம்பவம்
லண்டனின் வூலிச் பகுதியில் கடந்த புதனன்று வீதியில் வைத்து பிரிட்டிஷ் படைவீரர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தலதா மாளிகைக்கு முன்னால் பிக்கு தீக்குளிப்பு
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த பிக்கு ஒருவர் தீ குளித்துள்ளார்.
சுதந்திர பறவைகளாக போர்க் குற்றவாளிகள்; இலங்கை அரசு மீது மன்னிப்புச் சபை சாடல்
இலங்கையில் போர் முடிவடைந்தாலும் போர்க்குற்ற முறையீடுகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரப் பறவைகளாக உலாவுகிறார்கள் என லண்டனை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் சர்வதேச மன்னிப்புச் சபை அதன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐ.நாவுடன் இணக்கங்கங்களை ஏற்படுத்திக் கொள்ள இலங்கை மறுப்பு
தேசியப்பாதுகாப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்புடன் எவ்விதமான இணக்கங்களையும் ஏற்படுத்தி கொள்வதை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.





