Author Archives: rajharan
இலங்கையின் இரண்டு வங்கிகளில் புலிகளின் 86 மில்லியன் ரூபாவை ரெஜி வைப்பிலிட்டுள்ளார் – அரசாங்கம்
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இலங்கையில் உள்ள இரண்டு வங்கிகளில் 86 மில்லியன் பணம் வைப்புச் செய்யப்பட்டிருந்ததாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது என திவயின கூறியுள்ளது.
கடும் காற்றினால் மீனவர்கள் மாயம்! மூன்று சடலங்கள் மீட்பு! மீனவர்களை மீட்டுத்தர கோரி போராட்டம்
பலபிட்டி கடற்பரப்பில் 20 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 3 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் பயணித்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாகவும் தத்தளித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பலபிட்டி மற்றும் பெந்தர கடற்பரப்பில் இவ்வாறு மீனவர்களின்… Read more
அரசுடன் சேர்ந்தியங்கும் ஈபிடிபியும் 13வது திருத்தம் தொடர்பாக ஆராய குழு அமைப்பு
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் மாற்றங்களை கொண்டுவரவிருக்கும் அரசாங்க யோசனைகளை பரிசீலிப்பதற்காக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி குழுவொன்றை நியமித்துள்ளது.
மட்டக்களப்பில் பஸ் சில்லில் சிக்கி 2 வயது குழ்தை பலி
பஸ்ஸின் சில்லில் சிக்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் மட்டக்களப்பில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா உட்பட இராணுவ நீதிமன்றத்தால் 5,726 பேர் தண்டிக்கப்பட்டனர்- அமைச்சர் தினேஸ் குணவர்த்தன
2006ஆம் ஆண்டு முதல் 421 படை அதிகாரிகளும் 5205 படை வீரர்களும் இராணுவ நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டார்கள் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கிழக்கு மாகாண ஆலயங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்திற்கும் இராணுவத்திற்கும் தொடர்பில்லை!- இராணுவ பேச்சாளர்
கிழக்கு மாகாணத்தில் இந்து ஆலயங்களில் இடம்பெற்று வரும் கொள்ளைச் சம்பவங்களுக்கும் இராணுவத்தினருக்கும் தொடர்பு கிடையாது என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!
நாட்டின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் கூடிய காலநிலை நிலவிவருவதால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீனவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கை நீதிபதி ஜ.நா விசாரணை குழுவில் இருந்து விலகல்! விசாரணைகளை பதவி விலகல் பாதிக்காது- ஜ.நா
ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழாமொன்றிலிருந்து இலங்கை நீதிபதி ஒருவர் விலகிக் கொண்டுள்ளார்.
புலிகள் மீண்டும் வரலாம் என்ற அச்சத்தில் இலங்கை; அமெரிக்காவின் அறிக்கை கூறுகிறது
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் உருவாகலாம் என்ற அச்சம் காரணமாகவே சிவில் பாதுகாப்பு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர இலங்கை அரசு பின்னடிக்கிறது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சினால் வெளியிடப்பட்ட 2012ஆம் ஆண்டுக்கான பயங்கரவாத எதிர்ப்புத் தொடர்பான அறிக்கையிலேயே… Read more
தன்னை சீரழித்த இராணுவச் சிப்பாயை அடையாளம் காட்டிய 7 வயது சிறுமி
வவுனியா நெடுங்கேணியில் 7 வயது சிறுமி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட சந்தேக நபரை, பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளியன்று (7) நீதிமன்றத்தில் அடையாளம் காட்டியுள்ளதாகப் பொலிசார் தெரிவத்துள்ளனர்.





