Tag Archives: காணி

காணி சுவீகரிப்பு உறுதியானது- ஜனகபண்டார
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு மத்திய நிலையம் ஒன்றை நிறுவுவதற்காக, வலி.வடக்கில் 6 ஆயிரத்து 381 ஏக்கர் தனியார் காணிகள் திட்டமிட்டபடி சுவீகரிக்கப்படும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்று காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் அடித்துக்… Read more

காணி சுவீகரிப்பு தொடர்பான 2184 ரிட் மனுக்கள் விசாரணைக்கு- மேன் முறையீட்டு நீதிமன்றம்
யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ளமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2184 ரிட் மனுக்கள் மீதான விசாரணையை யூலை மாதம் 10 ஆம் திகதிக்கு ஒத்திவைத்த மேன்முறையீட்டு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டுள்ளது.

வடக்கு காணி விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு
வடக்கு காணி விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் அமைப்பு தலையீடு செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கு காணிப் பிரச்சினை தொடர்பில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான இணைப்புச் செயலக இலங்கைப் பிரதிநிதி அசென்கேயா ஓயூ, யாழ்ப்பாண கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

வடகிழக்கு மாகாணங்களுக்கு அனைத்து அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால தன்னாட்சி அதிகாரம் தேவை
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அனைத்து அதிகாரங்களுடன் கூடிய இடைக்கால தன்னாட்சி அதிகாரம் வழங்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட மூன்று தமிழ் அரசியல் கட்சிகள் இந்தியா ஊடாக, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.