இலங்கைப் போருக்குப் பின் சுமார் 8000 இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவில் குடியேறியுள்ளதாக ஆஸ்திரேலிய குடியுரிமைத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து கூறியுள்ள அதிகாரி, மே மாதம் 2009ல் இருந்து 2013ஆம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வரை ஆஸ்திரேலியாவுக்கு 8,170 இலங்கை அகதிகள் வந்துள்ளனர். இலங்கையில் போர் முடிவடைந்த பிறகுதான் இந்த அளவுக்கு இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு வந்துள்ளனர். 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு வந்த இலங்கை அகதிகளின் எண்ணிக்கை வெறும் 16 தான். அதே சமயம் 2012ஆம் ஆண்டில்தான் அதிகபட்சமாக 6,428 பேர் அகதிகளாக வந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.