ஆக்கிரமித்த பகுதியில் இருந்து வெளியேற மாட்டோம்: சீனா பிடிவாதம்

china-flag
ஆக்கிரமித்த பகுதியில் இருந்து வெளியேற மாட்டோம் : சீனா பிடிவாதம் – 4-வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வி

ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதிக்குள் கடந்த (ஏப்ரல்) மாதம் 15-ம் தேதி அத்துமீறி ஊடுருவிய சீன ராணுவத்தினர், சுமார் 19 கி.மீட்டர் தூரம் வரை இந்திய எல்லைக்குள் நுழைந்தனர்.

அப்பகுதியை ஆக்கீரமித்த சுமார் 50 சீன ராணுவ வீரர்கள் அங்கேயே முகாம்களை அமைத்து தங்கியுள்ளனர்.

இந்திய எல்லையை விட்டு வெளியேறுமாறு இந்தியா – சீனா ராணுவ உயரதிகாரிகளுக்கு இடையில் நடைபெற்ற 3 கொடி கூட்டங்களும் தோல்வியில் முடிந்தன.

இந்நிலையில், 4-வது முறையாக நேற்றும் இரு நாடுகளின் உயரதிகாரிகளுக்கு இடையில் கொடி கூட்டம் நடைபெற்றது.

சுமார் 45 நிமிடம் நடைபெற்ற இந்த கூட்டத்தின் போதும், சீனா தனது நிலைப்பாட்டில் பிடிவாதம் காட்டியுள்ளது.

‘லடாக்கில் உள்ள தவுலத் பேக் ஓல்டி எல்லைப் பகுதியில், சீன எல்லைக்குள் சுமார் 300 மீட்டர் தூரம் ஆக்கிரமித்துள்ள பகுதியில் இருந்து முதலில் இந்தியா வெளியேற வேண்டும். அதன் பிறகே, இப்போது ஆக்கிரமித்த பகுதியை விட்டு நாங்கள் வெளியேறுவது தொடர்பாக யோசிக்க முடியும்’ என சீனா கூறியுள்ளது.

எனவே, 4-வது கொடி கூட்டமும் தோல்வியில் முடிந்தது. எனினும், பேச்சு வார்த்தை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: , , ,