இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து பிரித்தானியா கவலை வெளியீடு

uk-flagஇலங்கை மனித உரிமை நிலைமைகள்  2012ம் ஆண்டில் திருப்தி அடையும் வகையில் அமையவில்லை என பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.

2011ம் ஆண்டில் காணாமல் போன லலித் குமார் மற்றும் குகன் ஆகியோர் தொடர்பில் காத்திரமான விசாரணைகள் நடத்தப்படவில்லை அத்துடன் கடந்த ஆண்டில் பல பாதகமான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக கருத்து சுதந்திர முடக்கம், நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கு எதிராக செயற்படல், ஊடக சுதந்திர முடக்கம் போன்றன தொடர்பில் திருப்தி அடைய முடியாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது.

சட்டவிரோத ஆட்கடத்தல்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் மீதான ஒடுக்குமுறைகள் உள்ளிட்ட பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் 2012ம் ஆண்டிலும் நீடித்ததாக பிரித்தானியா குற்றம் சுமத்தியுள்ளது.

எனவே மனித உரிமை மேம்பாடு, ஜனநயாகம் போன்றவற்றில் பொதுநலவாய அமைப்புக்களின் கொள்கைகள் கோட்பாடுகளை பின்பற்றுமாறு இலங்கையை வலியுறுத்துவதாக பிரித்தானியா கோரிக்கை விடுத்துள்ளது.

-uthayan

Tags: ,