சீனாவில் புதிய வகை பறவைக் காய்ச்சல் பரவுகிறது!

chinaசீனாவில் புதிதாக H7N9 பறவைக் காய்ச்சல் கிருமி பரவ ஆரம்பித்துள்ள காரணமாக ஷாங்காய் நகரத்து கோழிச் சந்தைகளை தாற்காலிகமாக மூடும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். பொதுமக்களுடைய பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சந்தை மூடப்படுவதாக நகர நிர்வாகம் சார்பாகப் பேசவல்லவர் கூறினார்.

கறிக்கடை ஒன்றில் புறாக்கள் இடையே இந்த வைரஸ் காணப்பட்டதை அடுத்து கறிக்காக வளர்க்கப்படும் பறவைகளில் சுமார் இருபதாயிரம் பறவைகளைக் கொல்லும் நடவடிக்கைகளும் அங்கு வியாழனன்று ஆரம்பித்துள்ளன.
சந்தை மூடப்பட்டு, அந்த இடத்தை கிருமி நாசினி கொண்டு கழுவும் வேலைகள் நடந்துவருகின்றன.
அந்த இடத்துக்கு பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனம் தகவல்

இதனிடையே இந்தக் கிருமி ஒரு மனிதரிடம் இருந்து இன்னொரு மனிதருக்கு குறிப்பிட்ட வகைகளில் நிச்சயமாக பரவுகிறது என்பதற்கு இதுவரை ஆதாரம் எதுவும் இல்லை என ஐநாவின் உலக சுகாதார கழகம் கூறுகிறது. அதற்காக இக்கிருமி ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவவே இல்லை என்று தாம் சொல்வதை விளங்கிக்கொள்ளக் கூடாது என்று அது அறிவுறுத்தக்கூடாது.
H7N9 ரக பரவைக் காய்ச்சல் கிருமி இதற்கு முன்னாள் மனிதர்களிடம் காணப்படாத ஒருவகை கிருமி, ஆனால் பறவைகளை மட்டுமே பாதிக்கும் என்பதாக இருந்துவந்த H7N9 கிருமி பாலூட்டி விலங்குகளையும் பாதிக்ககூடிய விதமாக ஏற்கனவே மறுவியிருந்தது.
இவ்வகைக் கிருமியால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்துவந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களில் இந்த கிருமித் தொற்று ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
இந்தக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்ட 14 பேருடனும் பழக நேர்ந்திருந்த சுமார் நானூறு பேரையும் உடனடியாகத் தேடிக் கண்டுபிடித்து அவர்களுக்கு கிருமித்தொற்று வந்துள்ளதா என்று கண்காணிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது என்று உலக சுகாதார கழக அதிகாரி கிரெகொரி ஹார்ட்ல் தெரிவித்துள்ளார்

மருந்து இல்லை

H7N9 ரக பறவைக் காய்ச்சல் கிருமிக்கு எதிராக தடுப்பு மருந்து எதுவும் இதுவரை கிடையாது.
இன்ஃபுளுவென்ஸா ஜுரத்துக்கு கொடுக்கப்பட்டுவருகிற சில மருந்துகள் இந்த புதிய காய்ச்சலைக் கட்டுப்படுத்த உதவலாம் என்று மருத்துவர்கள் நம்பினாலும், இந்த மருந்துகளை பயன்படுத்தினால் பலன் ஏற்படுமா என்ற அனுபவம் இவ்விஷயத்தில் மருத்துவர்களுக்கு இல்லை.
இந்தக் கிருமித் தொற்று வந்தவர்களில் ஆறு பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். இவர்களில் நான்கு பேர் ஷாங்காயைச் சேர்ந்தவர்கள் என்று பதிவாகியுள்ளது.
கடைசியாக உயிரிழந்தது ஷெஜியாங் மாகாணத்தில் ஓர் விவசாயி என சீன அரச ஊடகம் தெரிவிக்கிறது.
இந்த கிருமித் தொற்று தற்போதைக்கு வெளிநாடுகளில் பரவுவதற்கு வாய்ப்பு குறைவு என ஷாங்காய் சுகாதாரத்துறை ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags: , ,