ஈழ அகதிகளுக்கு இரட்டை குடியுரிமை; தமிழக மாணவர் அமைப்பு கோரிக்கை

Tamil-Refugees-in-Indiaஇந்தியாவிலுள்ள ஈழ அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அத்துடன் தமிழகத்திலுள்ள சிறப்பு அகதிமுகாம்கள் மூடப்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு கோரியுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் மாணவர்களினால் தொடர்ச்சியான ஒழுங்கு முறை அடிப்படையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பினர் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்றுப் பேசினர்.

“ஈழத்தில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட மே 19ஆம் திகதியன்று மாபெரும் கவனவீர்ப்புப் பேராட்டங்கள் தமிழகம் முழுவதும் நடத்தப்படவுள்ளன. இந்தப் பேராட்டங்கள் மாணவர் கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும்” என்று அவர்கள் அறிவித்தனர்.

மேலும் இந்தியாவிலுள்ள ஈழஅகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்திலுள்ள பூந்தமல்லி, செங்கல்பட்டு ஆகிய சிறப்பு அகதி முகாம்களை மூடுவதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்திலுள்ள ஈழஅகதிகள் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-uthayan

Tags: ,