இந்தியா தொழிலாளர்களையும் வெளியேற்றப் போகிறது இலங்கை?

workers2கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் பணியாற்றும் 2000 இந்தியத் தொழிலாளர்களை வெளியேற்ற இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்புத் துறைமுகத்தில், கப்பல்களை கட்டும் மற்றும் பழுதுபார்க்கும் கொழும்பு டொக்யார்ட் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றனர்.

இங்கு பெரும்பாலும் இந்தியத் தொழிலாளர்களே பணியாற்றி வருகின்றனர். கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தில் 2000 இந்தியத் தொழிலாளர்கள் பணியாற்றுவதாக சிறிலங்கா தொழில் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இவர்களுக்குப் பதிலாக இலங்கை பணியாளர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு கொழும்பு டொக்யார்ட் நிறுவனத்தை இலங்கை அரசாங்கம் கேட்டுக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இந்தியத் தொழிலாளர்களை அங்கிருந்து வெளியேற்றவே, இலங்கை பணியாளர்களைப் பயிற்றுவிக்குமாறு இலங்கை அரசாங்கம் கொழும்பு டொக்யார்ட நிறுவனத்தைக் கோரவுள்ளதற்கு காரணம் என்று கருதப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான போராட்டங்களை நடத்தி வருவதால், தமிழ்நாட்டில் இருந்து வரும் கப்பல்களில் இருந்து பொருட்களை இறக்கமாட்டோம் என்று கொழும்புத் துறைமுக பொதி இறக்கும் பணியாளர் சங்கத்தின் தலைவர் அண்மையில் எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-uthayan

Tags: ,