போர் குற்ற விசாரணை குறித்ததான அறிக்கையினைப் பகிரங்கப்படுத்த முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக் கட்டயுத்தத்தின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றச் செயல் தொடர்பில் இராணுவத்தினர் நடத்திய விசாரணை அறிக்கையினை பகிரங்கப்படுத்துமாறு அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசேன் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
1957ஆம் ஆண்டு இராணுவ சட்டத்தின் அடிப்படையில் எந்தவொரு விசாரணை அறிக்கையையும் பகிரங்கப்படுத்துவது சட்ட ரீதியில் குற்றமாகும்.
இவ்வாறு அறிக்கைகளை வெளியிடத் தொடங்கினால் ஆயிரக் கணக்கான விசாரணை அறிக்கைகளை வெளியிட நேரிடும் என உயர் இராணுவ அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான செயல் இராணுவத்தினரின் ஒழுக்கம் தொடர்பில் சர்ச்சைகளை ஏற்படுத்தக் கூடும்.
எனவே இராணுவ விசாரணை அறிக்கைகளை பகிரங்கப்படுத்த முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
-uthayan





