இந்தியாவின் எம்.பிக்கள் குழு மற்றும் வெளிவிவகார அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை மாலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் வருகை தந்த குழுவினரை யாழிலுள்ள இந்திய துணை உயர்ஸ்தானிகர் வே. மகாலிங்கம் வரவேற்றார்.
இந்த குழுவில் நாடளுமன்ற உறுப்பினர்களான சௌகத்தா றோய், சந்தீப் தீக்த், அனுரா தக்கூர் தனஞ்சய சிங், கௌட் யஸ்கி மற்றும் பிரகா ஜவதேகர ஆகியோரும் இந்திய வெளிவிவகார அமைச்சின் அபிவிருத்தி கூட்டு நிர்வாகத்தின் சிறப்பு செயலாளர் பி.எஸ். இராகவன், இந்திய வெளிவிவகார அமைச்சின் சிறப்பு செயலாளரும் நிதி ஆலோசகருமமான பிமல் ஜுல்கா ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.
இரண்டு நாட்கள் வட மாகாணத்தில் தங்கியிருந்து; இந்திய அரசாங்கத்தின் நிதிப் பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்களை இக்குழுவினர் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்திய எம்.பிக்கள் குழு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய சுரேஸ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், அரியநேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், எஸ்.கஜேந்திரன், மற்றும் மன்னார் ஆயர் அதி.வண இராயப்பு யோசேப், யாழ்ப்பாணத்திலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் யாழில் உள்ள இந்திய துணைத்தூதரகத்தில் வைத்து கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளனர்.
-uthayan