எப்போது பெண்கள் தனியாக எந்த நேரத்திலும், பயமின்றி செல்ல முடியுமோ, அந்த நகரம் தான் பாதுகாப்பான நகரம். ஆனால் தற்போது எந்த நகரங்களிலும் சிறு பெண் குழந்தைகளுக்கு கூட, சரியான பாதுகாப்பானது கிடைப்பதில்லை. இதுவரை கிராமங்களில் வாழும் பெண்களுக்குத் தான் பாதுகாப்பு கிடைப்பதில்லை என்ற நிலை இருந்து வந்தது.
ஆனால் கிராமங்களை நகரங்களோடு ஒப்பிடுகையில் நகரங்களில் தான் அதிக ஆபத்து உள்ளதாக கருத்து கணிப்பு சொல்கிறது. ஏனெனில் கிராமங்களை விட மக்கள் கூட்டம் நகரங்களில் அதிகம் இருப்பதால் தான் அதிக ஆபத்தானது உள்ளது. ஆய்வு ஒன்றில், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்று சொல்கிறது.
ஏனெனில் பாலியல் வன்முறைகள், கடத்தல் போன்றவை இந்தியாவில் அதிகம் உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், தாக்குதல் அதிகரித்துள்ளன. மேலும் கூகுளில் அதிகம் “செக்ஸ்” என்ற வார்த்தையைத் தேடுபவர்களில், உலகில் உள்ள ஏழு நாடுகளில் இந்தியாவில் இருப்போர் தான் அதிகம் என்று கூகுள் கூறுகிறது.
மேலும், பெண்களுக்கு பாதுகாப்பில்லாத நாடுகளில், இந்தியா மிகவும் மோசமான இடத்தைப் பெற்றுள்ளது என்று உள்ளது. அனைத்து நகரங்களில் நன்மைகளும், தீமைகளும் இருக்கும். ஆனால் அவற்றில் பெரும்பாலான நகரங்களில் எவ்வளவு நன்மை கிடைக்கிறதோ, அதே அளவில் தீமைகளும் உள்ளது.
எனவே பெண்கள் எப்போதும் மற்றவர்களை நம்பாமல், சுயபாதுகாப்புக்காக, பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களை பற்றி பார்க்கலாம்.
• டெல்லி என்று சொன்னாலே அனைவரும் தற்போது நினைவுக்கு வருவது டெல்லி மாணவி பலாத்கார விவகாரம் தான். ஆகவே தற்போது பெண்கள் டெல்லி என்று சொன்னாலே, பயப்படுகின்றனர். இந்தியாவின் தலைநகரமான டெல்லி, தற்போது புதிய பெயரையும் பெற்றுவிட்டது. அது தான் “பலாத்காரத்தின் தலைநகரம்”. மேலும் தேசிய குற்றப் பதிவு செயலம், டெல்லியில் மொத்தம் 23.8% கற்பழிப்பு வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கிறது.
• கொல்கத்தாவை பற்றி சொல்லவே வேண்டாம். ஏனெனில் இங்கு பெண்களை கிண்டல் செய்தல், கற்பழிப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. எனவே தான் பெண்கள் இங்கு செல்லவே அஞ்சுகிறார்கள்.
• தென்னிந்தியாவில் குற்றம் அதிகம் நடக்கும் இடங்களில் பெங்களூரும் ஒன்று. இங்கு என்ன தான் பெண்கள் வருவதற்கு ஆசைப்பட்டாலும், போதைப் பழக்கம் மற்றும் பெண்களுக்கு நைட் ஷிப்ட் வேலை இருப்பதால், கற்பழிப்பு எண்ணிக்கையும் அதிகம் உள்ளது. எனவே தான், இந்த இடத்திற்கு பெண்கள் செல்ல விரும்புவதில்லை.
• என்ன தான் மக்கள் கூட்டம் அதிகம் இருந்தாலும், மும்பையில் தான் 10.8% கற்பழிப்பு வழக்கு அதிகம் உள்ளது. ஆகவே தான் பெண்கள் இங்கு தனியாக வெளியே செல்லவும், தங்குவதற்கும் பயப்படுகின்றனர்.
• மஹாராஷ்டிராவில் பெண்கள் வெறுக்கும் நகரங்களில், அங்கு இரண்டாவது பெரிய நகரமாக இருக்கும் பூனேயும் ஒன்று. பூனேயில் மிகவும் கடினமான அனுபவம் என்ற சொன்னால், இங்கு போக்குவரத்து அமைப்பிலிருந்து, பொது பேருந்துகள் வரை அனைத்தும் மிகவும் மோசமாக இருக்கும்.
• இந்தியாவிலேயே வன்முறை குற்றங்கள் அதிகம் நிகழும் இடங்களில் உத்தர பிரதேசம் தான் முதன்மையாக 11.9% ஆக உள்ளது. இங்கு பெண்களுக்கு சிறு பாதுகாப்பு கிடைப்பதே பெரிய சந்தேகம் தான்.