நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆறு மீனவர்கள் உட்பட எட்டுப் பேர் உயிரிழந்துள்ள அதேவேளை 43 பேர் காணாமற்போயுள்ளனர்.
காணாம ற்போனவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
காணாமற்போனவர்களை தேடும் பணியில் இலங்கை விமானப்படையும் கடற்படையும் ஈடுபட்டுள்ளன.
இதேவேளை, சீரற்ற காலநிலை தொடர்வதால் இன்றும் மீனவர்களை கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை அவதானிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-