இச்சம்பவம் திவுலப்பட்டி மருதகாமுல்ல பிரதேசத்தில் பிற்பகல் 12.30 மணிக்கும் 1.15 மணிக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
மஞ்சநாயக்க ஆராச்சிகே நோன பிரேமாவதி இன்ற 59 வயதுடைய வயோதிப் பெண்ணே இவ்வாறு படுகொலைச்செய்யப்பட் டுள்ளார். அவரது தலை நிலத்திலும் கட்டில் விளிம்பிலும் மோதி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பெண்ணின் கணவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிற்றூழியராக பணியாற்றுகின்றார். இந்த சம்பவம் தொடர்பாக திவுலபிட்டி பொலிஸார் சந்தேகத்தின் பேரில் மூவரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸ் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளதாவது,
திவுலபிட்டி பிரதேசத்தில் நான்கு பேர் நேற்று மதுபானம் அருந்தியுள்ளனர். மதுபானம் தீர்ந்து போகவே பிரதான சந்தேக நபர் மதுபானம் வாங்குவதற்காக புறப்பட்டு வந்து குறித்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக சைக்கிளை நிறுத்தியுள்ளார்.அவர் அநத் பெண்னுக்கு அறிமுகமான நபராவார்.
இந்நிலையில் வீட்டிற்குள் புகுந்த சந்தேக நபர் தனிமையில் இருந்த பெண்னை வல்லுறவு புரிந்து விட்டு அப்பெண்ணின் தலையை கட்டில் விளிம்பிலும் நிலத்திலும் மோதி கொலை செய்து விட்டு சடலத்தை குளியலறையில் போட்டு மறைத்து விட்டு வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.
இது தொடர்பாக சந்தேக மடைந்த குறித்த வீட்டின் கீழ் பகுதியல் இலத்திரனியல் உபகரணங்களை பழுதுபார்க்கும் நிலையம் ஒன்றை நடத்திவரும் நபர் ஒருவர் பொலிஸ் அவசர பிரிவிற்கு அறிவித்துள்ளதை அடுத்து பிரதான சந்தேக நபருடன் மதுபானம் அருந்திய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் பிரேத பரிசோதணைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-