தமிழ் பெண்கள் மீதான பாலியல் வன்னொடுமைகளை கண்டிப்பதுடன் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட தீர்மானித்துள்ளோம் என தமிழ் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது.
அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் பெண்கள் சிறுவர்கள் மீதான பாலியல் வன்புணர்ச்சியை கண்டித்து இன்று அவர்கள் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இவ் அறிக்கையில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது,
எமது மக்கள் இழப்பதற்கு எதுவும் இன்றி எஞ்சியிருந்த தம் உயிருடனும் தன்மானத்துடனும் தப்பி வந்து வாழ்வதற்காக போராடிக்கொண்டிருக்கும் நிலையில் பெண்களும் சிறுவர்களும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக நெடுங்கேணி, உடையார்கட்டு, கனகராயன்குளம் போன்ற பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதை எமது அமைப்பு கண்டிப்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வை பெற்றுக்ககொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.
அத்துடன் எதிர்காலத்தில் தன்னார்வ அமைப்புக்களுடன் இணைந்து வன் கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பதுடன் மக்கள் மத்தியில் வழிப்புணர்வை ஏற்படுத்தவும் நாம் தீர்மானித்துள்ளோம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வன்னியிலிருந்து நமது செய்தியாளர் வசந்தரூபன்-