தமிழ்நாட்டு முகாம்களில் வசிக்கும் இலங்கைச் சிறார்களுக்கு பிறப்புச்சான்றிழ்கள் மற்றும் பிரஜா உரிமைப்பத்திரங்களை
விநியோகிக்கும் வேலைத்திட்டம் ஒன்று சென்னையிலுள்ள இலங்கைத்தூதரகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ராமேஷ்வரம், விருதுநகர் மற்றும் மதுரை ஆகிய முகாம்களிலுள்ள இலங்கைச் சிறார்கள் 353 பேருக்கு பிறப்பு
அத்தாட்சி பத்திரங்களும் 567 பேருக்கு பிரஜா உரிமை பத்திரங்களும் விநியோகிக்கப்பட்டன.
சென்னையிலுள்ள இலங்கைக்கான பதில் பிரதித்தூதுவர் ஓ.எல். அமீர் தலைமையில் இந்த செயல் திட்டம் நடைபெற்றது.
மேலும், தமிழ் நாட்டில்லுள்ள முகாம்களில் பிறந்த இலங்கைச்சிறார்களை பதிவு செய்வதற்காக பிரதித்தூதரகம் மூலம்
நடமாடும் சேவைகளும் ஆரம்பிககப்பட்டுள்ளன.தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது முகாம்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றன.
இதுவரை தமிழ் நாட்டில்லுள்ள முகாம்களில் பிறந்த இலங்கைச்சிறார்களுக்கு, 5000 த்துக்கும் அதிகமான பிறப்புச்
சான்றிதழ்களும் பிரஜா உரிமை பத்திரங்களும் விநியோகிக்கபபட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.