எனது தந்தை பயங்கரவாதியல்ல: அசாத் சாலியின் மகள் கண்ணீர்

azath-salley-daughter
எனது தந்தை பயங்கரவாதியல்ல; ஐக்கியத்துக்காக குரல் கொடுத்தவர்: அசாத் சாலியின் மகள் கண்ணீர் மல்கத் தெரிவிப்பு

எனது தந்தை பயங்கரவாதியல்ல, இனவாதத்தையும் மதவாதத்தையும் எதிர்த்து ஐக்கியத்துக்காக குரல் கொடுத்தவர். அவரை ஏன் தேவையற்ற விதத்தில் கைது செய்து தடுத்துவைக்க வேண்டும்? என அசாத் சாலியின் மகள் அமீனா அசாத் சாலி கண்ணீர் மல்கக் கேள்வி எழுப்பினார்.

குற்றப் புலனாய்வினரால் என் தந்தை கைது செய்யப்பட்ட தினத்திலிருந்து அவர் எவ்வித ஆகாரமும் உட்கொள்ளாமல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஆகையால் அவரின் உடல் நிலை நிமிடத்துக்கு நிமிடம் மோசமடைந்து வருகிறது. அத்தோடு நானும் என் தந்தையின் விடுதலைக்காக உண்ணாவிரதம் இருக்கின்றேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று அசாத் சாலி நிலையத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வைத்தியசாலையில் இருக்கும் எனது தந்தையின் உடல் நலம் படிப்படியாக மோசமடைந்து வருகிறது. இதற்கு முன்னர் ஒருபோதும் நான் அவரை இப்படிப் பார்த்ததில்லை. நேற்று நானும் எனது தாயும் வைத்தியசாலைக்குச் சென்றபோது அவர் தலையில் வெள்ளைப் பட்டியணிந்திருந்தார். ஏன் என்று கேட்டபோது தலைவலி என்றார்.

சாப்பிடுமாறு கூறியபோது முடியாது என்றார். தண்ணீர் குடிப்பதையும் மருந்து குடிப்பதையும்கூட அவர் மறுத்துள்ளார். எனவே தயவு செய்து அவரை விடுவிக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Tags: , ,