பௌத்த மண்ணை வெளிநாட்டினரின் காலனியாக மாற்ற விடமாட்டோம்; பொதுபல சேனா

senaஇலங்கை என்ற பௌத்த மண்ணை வெளிநாட்டினரின் காலனியாக மாற்ற இடமளிக்கப் போவதில்லை என  பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.

அபிவிருத்தி எனக் கூறிக்கொண்டு, சூதாட்ட நிலையங்கள், கசினோ நிலையங்களை திறந்து, இலங்கையை வெள்ளைகாரர்களின் காலனியாக மாற்ற இடமளிக்க போவதில்லை என அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

பௌத்த மாநாடு ஒன்றின் மூலம் நோய்வாய்ப்பட்டிருக்கும் நாட்டை மீண்டும் உயிர்பிக்க போவதாகவும் இலங்கையை மற்றுமொரு தாய்லாந்ததாக முயற்சிக்கும் அனைவரும் இது வெறும் கனவாக மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை

அரசாங்கத்திற்கு மாத்திரமல்ல, எதிர்க்கட்சியினருக்கும், இலங்கை என்ற பௌத்த மண்ணை வெளிநாட்டினரின் காலனியாக மாற்றும் தேவை இருந்த போதிலும் இதனை செய்ய இடமளிக்க போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா உடை தொடர்பாக பொதுபல சேனா அமைப்பு சில செயற்பாடுகளில் ஈடுபட உள்ளதாக ஊடகங்களில் வெளியிடப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானது.

சில இணையத்தளங்கள் தமது அமைப்பை விமர்சிப்பதாகவும் இந்த இணையத்தளங்கள் பொதுபல சேனா குறித்து பொய்யான செய்திகளை வெளியிட்டு வருகின்றன என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Tags: ,