இலங்கை நிலைமைகள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை வெளியிடவுள்ளது

amnesty
இலங்கை நிலைமைகள் குறித்து சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரமளவில் இந்த அறிக்கை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாற்றுக் கொள்கையாளர்கள் மீது இலங்கை அரசாங்கம் எவ்வாறும் அடக்குமுறைகள், தாக்குதல்கள், அச்சுறுத்தல்களை மேற்கொண்டு வருகின்றது என்பது குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது. மாற்றுக் கொள்கை மீதான தாக்குதல் என்ற தலைப்பில் இந்த அறிகi;க வெளியிடப்படவுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிடும் தரப்பினர் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. ஊடகவியலாளர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சட்டத்துறையை சேர்ந்தவர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பல்வேறு தரப்பினர் இவ்வாறு அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளது.

Tags: , ,