விஷம் தடவப்பட்ட கடிதத்தை ஒபாமாவுக்கு அனுப்பியவர் கைது

Tamil-Daily-News_obama
வாஷிங்டன்: அமெரிக்காவின், பாஸ்டன் நகர குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபரும், அதிபர் ஒபாமாவின் விலாசத்துக்கு விஷம் தடவப்பட்ட கடிதத்தை அனுப்பிய மற்றொரு நபரும், கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில், சமீபத்தில் இரண்டு குண்டுகள் வெடித்ததில், மூன்று பேர் பலியாயினர்; 170 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை, எப்.பி.ஐ., அதிகாரிகள், தீவிரமாக தேடி வந்தனர். குண்டு வெடிப்பு நடந்த பகுதியில் இருந்த, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆராய்ந்தனர்.

மராத்தான் போட்டி நடக்கும் பாதையில் உள்ள குப்பை தொட்டியில், குண்டு வைத்ததாக சந்தேகிக்கப்படும் நபரை, போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபரின் பெயர், வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, மிசிசிபி பகுதியை சேர்ந்த, குடியரசு கட்சி எம்.பி.,ரோஜர் விக்கருக்கும், அதிபர் ஒபாமாவுக்கும், சட்ட நிபுணர் ஒருவர் பெயருக்கும், விஷம் தடவப்பட்ட கடிதம் வந்தது. “ரிசின்’ எனப்படும் கொடிய விஷத்தை தடவி, தபாலில் அனுப்பிய, மிசிசிபி பகுதியை சேர்ந்த, பால் கெவின், 45, என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags: , ,