திருச்சி மற்றும் கொழும்பு நகரங்களுக்கு இடையிலான மிஹின் லங்கா வாராந்த விமான சேவைகளை நிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சென்னையை தளமாக கொண்டு இயங்கும் பொது வர்த்தக முகவர் நிறுவனமான டிரான்ஸ்லகாவின் நிறைவேற்று பணிப்பாளர் எஸ்.கே.மிட்டல் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் ஜுன் முதலாம் திகதியுடன் சேவைகள் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மற்றும் திருச்சிக்கு இடையிலான சுற்றுலாப் பயணிகளின் போக்குவரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டமையே இதற்கான காரணம் என்று எஸ்.கே.மிட்டல் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் வாராந்தம் 4 தடவைகள் மிஹின் லங்கா விமானங்கள் கொழும்பிலிருந்து திருச்சி நோக்கி பயணிக்கின்றன.
இருப்பினும் அண்மையில் தமிழகத்தில் இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் மற்றும் தாக்குதல்களை அடுத்து சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர, ஐரோப்பா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளுக்கு கொழும்பிலிருந்து திருச்சி, ஷார்ஜா மற்றும் பஹ்ரேன் ஊடாக பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.