செல்லப் பிராணி

monkeyமுல்லா ஒரு செல்லப் பிராணியை வளர்க்க விரும்பினார். உடனே அவர் மனைவி ஒரு குரங்கைக் கொண்டு வந்தார்.

முல்லாவுக்கு இது பிடிக்கவில்லை.”குரங்கு என்ன சாப்பிடும்?”என்று கேட்டார்.

மனைவி,”நாம் என்ன சாப்பிடுகிறோமோ அதை குரங்கும் சாப்பிடும்.”என்று பதில் கூறினார்.

”அது எங்கே தூங்கப் போகிறது?”என்று அவர் கேட்க,

மனைவி,”நம்முடைய படுக்கையில் நம் கூடத்தான்.”என்றார்.

முல்லா கோபமுடன்,”நம் படுக்கையிலா? நாற்றத்தை யாரால் பொறுத்துக் கொள்ள முடியும்?”என்று கேட்டார்.

அவர் மனைவி அமைதியாக சொன்னார்,”என்னால் அதைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்றால், குரங்காலும் முடியும் என்று தான் நினைக்கிறேன்.”

Tags: ,