இலங்கை வந்துள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியினரும் தமிழ் அரசியல் கட்சி பிரதி நிதிகளும் யாழில் சந்திப்பு

bjp_team_in_lankaஇலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

இந்திய எம்.பிக்கள் குழுவினர் நேற்று புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். இந்நிலையில் இந்திய எம்.பிக்கள் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ்க்கட்சி பிரதிநிதிகளுக்கும் இடையில் இந்த சந்திப்பு நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலுள்ள, இந்தியாவுக்கான கவுன்ஸ்லேட் ஜெனரல் வி.மகாலிங்கத்தின் வாசஸ்தலத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் தமிழரசு கட்சியின் சார்பில் இரு பிரதிநிதகளும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் ஒருவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி ஆகியோரும் கலந்துக்கொண்டுள்ளனர்.

இந்த சந்திப்பில், மட்டக்களப்பில் அண்மைகாலமாக இடம்பெற்ற இந்துகோவில்களின் விக்கிரங்கள் உடைப்பு, வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் காணி சுவீகரிப்புகள் மற்றும் இவ்விரு மாகாணங்களிலும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் இந்தியா வழங்கிவருகின்ற உதவிகள் தொடர்பில் தமிழ்க்கட்சியினர் விரிவாக எடுத்து கூறியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், யாழ்.குடா நாட்டின் நிலவரங்கள் குறித்து இந்த குழுவினர் கேட்டறிந்துக்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,