வடக்கு மாகாணசபைக்குத் தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அரசாங்கம் முயற்சி செய்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
வடக்கு மாகாணத்தில் அரசாங்கம் புதிய கிராமங்களை அமைத்து சிங்கள, முஸ்லிம் மக்களைக் குடியேற்றி வருகிறது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
ஒரு இலட்சம் இடம்பெயர்ந்த தமிழ் மக்கள் உறவினர் வீடுகளிலும், மேலும் 80 ஆயிரம் பேர் இந்தியாவிலும் வாழ்கின்றனர்.
இவர்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்படவில்லை.
வடக்கு மாகாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து இலங்கையின் ஏனைய பகுதிகளில் தற்காலிகமாக வசித்து வருவோரை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொள்வதற்கு வழி செய்யும் சட்டமூலம் ஒன்று நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை மற்றும் இந்திய அரசாங்கங்களுடன் பேச்சு நடத்த தமிழரசுக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.
வடக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்படும் வரையில் முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எந்தத் தீர்மானமும் எடுப்பதில்லை என்றும் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-