புலிகள் மீதான தடையை நீக்கி இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவும்!

vaigoஇந்தியாவில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்று ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கைவிடுத்துள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தமிழ் அமைப்புகள் பெங்களூரில் நடத்திய பொதுக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

னப்படுகொலை குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும ஈழத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்பதுடன் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை உலக நாடுகள் இனப்படுகொலை குற்றவாளியாக அறிவித்து தண்டிக்க வேண்டும்.

இலங்கையில் நடைபெற்ற போர் குற்றங்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்தியாவில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

-tamilmirror

Tags: ,