ஈராக்கைச் சேர்ந்த நபரொருவர் கடந்த 15 வருடங்களாக தினமும் விஷமிக்க தேள்களை உண்டு வாழ்ந்து வருகிறார்.
ஈராக்கிலுள்ள சமர்ரா எனுமிடத்தைச் சேர்ந்த 34 வயதான இஸ்மாயில் ஜெஸீம் முஹம்மது என்ற விவசாயி ஒருவரே இவ்வாறு தேள் உண்பதற்கு அடிமையாகியுள்ளார்.
ஜெஸீமை ஒருமுறை கொடிய தேள் வகை ஒன்று தீண்டியுள்ளது. இதன் பின்னரே தேளினை உண்ண ஆரம்பித்துள்ளார் ஜெஸீம்.
காலப்போக்கில் அவரினால் தேளினை உண்ணாமல் இருக்க முடியவில்லை. தற்போது தினமும் கொடிய வகை தேள்களை உண்டு வருகிறார்.