யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் வீட்டின் மீது கல்வீச்சு

tharsnath
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்ஷானந் பரமலிங்கத்தின் வீடு இனந்தெரியாத நபர்களினால் கல்வீச்சுக்கு இலக்காகியுள்ளது.

யாழ்ப்பாணம் பிறவுண்வீதியில் உள்ள தனது வீடு நேற்று இரவு (31) 7.20 மணியளவில் தாக்குதலுக்கு இலக்கானதாக தர்ஷானந் தெரிவித்தார்.

அவரது வீட்டின் முன் பக்க ஜன்னல் கண்ணாடிகள் இதன்போது சேதமடைந்துள்ளன.

இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தெரியப்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, பல்கலைக் கழகத்தில் மாவீரர் நாள் அனுஸ்டித்தமை தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வின் பின் விடுவிக்கப்பட்டவர் என்பதும், இவ்வாரம் பல்கலைக்கழக பேராசிரியரின் செயற்பாட்டை கண்டித்து மேற்கொள்ளப்பட்ட ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: ,