தமிழர் தீர்வு தொடர்பில் புதுடில்லியில் மாநாடு; புலம்பெயர் தமிழருக்கும் அழைப்பு

meet
தமிழ் மக்களின் தீர்வு தொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவில் கூட்டப்படும் மாநாட் டில் பங்குபற்றுமாறு புலம் பெயர் தமிழர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்திய மத்திய அரசின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரான ”தர்சன நாச்சியப்பனினால் இந்த மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்படுவது தொடர்பில், இங்குள்ள தமிழ்க் கட்சிகளை டில்லிக்கு அழைத்து இவ்வாறானதொரு மாநாட்டை 2011 ஆம் ஆண்டு ”தர்சன நாச்சியப்பன் நடத்தியிருந்தார்.

இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற கோஷம் இலங்கை அரச மட்டத்தில் எழுந்துள்ள நிலையிலேயே மேற்படி மாநாடு நடத்தப்பட்டுள்ளது.
புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கு இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் பங்குபற்றுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த மாநாட்டில் பங்குபற்றுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் எந்த முடிவும் எடுக்கவில்லை எனத் தெரியவருகிறது.

Tags: ,