கொழும்பில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு- கொழும்பு நகர சுகாதார வைத்திய அதிகாரி

Aedes_aegypti_feeding
2012 ஆம் ஆண்டு முதல் ஐந்து மாதங்களுக்கும் கடந்த ஐந்து மாதங்களுக்கும் இடையில் ஒப்பிடுகையில், கொழும்பில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டிருப்போரின் எண்ணிக்கை 20 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று கொழும்பு நகர சுகாதார வைத்திய அதிகார் பிரதீப் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கடந்த ஐந்து மாதங்களில் கொழும்பில் டெங்கினால் பாதிக்கப்பட்டு ஐந்து பேர் மரணமடைந்துள்ளதுடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1200 க்கும் அதிகமாகிவிட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டவர்களில் 55 வீதமானோர் மாணவர்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது டெங்கு நுளம்பு பரவுவதற்கான சுற்று சூழலை வைத்திருக்கின்ற 51 பாடசாலைகள் இனங்காணப்பட்டுள்ளன.

அவ்வாறான பாடசாலைகளுக்கு இறுதி எச்சரிக்கை கடிதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கொழும்பு மாநகர சபை அதில் பிரபல்யமான பாடசாலைகளும் அடங்கியிருப்பதாக தெரிவித்துள்ளது.

இலங்கையில் இருந்து எமது செய்தியாளர் வாசு-

Tags: