கட்டுநாயக்காவில் தமிழர் கைது

arrest
பிரிட்டன் குடியுரிமையுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் நேற்று அதிகாலை கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்துப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.  தவராஜா ரகுநாதன் (வயது50) என்பவரே கைதானவராவார்.

யாழ்.பிரதம தபாலகத்துக்கு அருகிலுள்ள நட்சத்திர விடுதி உரிமையாளரின் சகோதரரான இவர், யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேறி நீண்ட காலம் பிரிட்டனில் தங்கி இருந்தவர் நேற்று அதிகாலை 12.40 மணியளவில் கட்டுநாயக்காவை வந்தடைந்த போது கைதானார். விசாரணைகளின் பின்னர் நேற்று மாலை அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Tags: ,