மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளித்த மதகுரு மரணம்

monk-dead
மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டி புனித தலதா மாளிகைக்கு முன்னால் தனக்கு தானே தீமூட்டிக்கொண்ட பௌத்த மதகுரு, சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டி தலதா மாளிகைக்கு முன்பாகவே நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் அவர் தன்னைதானே தீ இட்டுக்கொண்டார்.பின்னர் அங்கு நின்றவர்களால் உடலில் பற்றிய தீயில் இருந்து மதகுரு காப்பாற்றப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் விசேட வானூர்தி மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலை அவசர பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்க்ப்பட்டு வந்த நிலையில் சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி மதகுரு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags: ,