தென்னிந்தியாவில் அமைக்கப்பட்டு வருகின்ற கூடங்குளம் அணுமின்னுற்பத்தி நிலையம் பாதுகாப்பு அற்றது என்று இந்தியாவின் முன்னணி நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
இந்த நிபுணர்கள் குழுவில் 60 பேர் அடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் அணுமின்னுற்பத்தி நிலையம் தொடர்பான ஆய்வு அறிக்கையினை நிபுணர்கள் தமிழக மற்றும் கேரள மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் மூலம் அனுப்பியுள்ளனர்.அத்துடன் கூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்காக ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உபகரணங்கள் தரமற்றவை என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அணுமின்நிலையத்தை செயற்படுத்துவதற்கு முன்னர் சுயாதீன குழுவொன்றை அமைத்து முறையான பரிசோதனையொன்றை மேற்கொள்ளுமாறும் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளதாக தெரியவருகின்றது..