மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா ஆஷா 501 இந்தியாவில் அறிமுகம்

Nokia-501
டெல்லியில் இன்று நோக்கியா நிறுவனம் தனது புதிய நோக்கியா ஆஷா 501 மொபைலை அறிமுகப்படுத்தியது. இதன் அறிமுக விழாவில் நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் எலோப் கலந்துக்கொண்டு ஆஷா 501 மொபைலை அறிமுகப்படுத்தினார்.

இந்நிகழ்வில் பேசிய அவர், ஆஷா போன் வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளிக்கும் விதமாக அமைந்துள்ளது. பேஸ்புக்குடன் நோக்கியா நிறுவனம் கூட்டு வைத்திருக்கிறது. மேலும் ஏர்டெல்லில் இலவசமாக பேஸ்புக்கிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது என்று ஸ்டீபன் கூறினார்.

நோக்கியா ஆஷா 501 போனின் சிறப்பு அம்சங்கள்:

- 3 இன்ச் திரை, 320x240 பிக்ஸல் நுணுக்கம் மற்றும் முழுவதும் தொடு திரை வசதி

- 3.2 மெகாபிக்சல் கொண்ட கேமரா

இரண்டு சிம்கார்டு மற்றும் ஒற்றை சிம்கார்டு வசதி

- 17 மணி நேர டாக்டைம் வசதி

- 2G and Wi-Fi, Bluetooth 3.0. ஆகியவற்றிற்கு சப்போர்ட் செய்யும் திறன்

- 4GB யிலிருந்து 32GB விரிவுபடுத்தக்கூடிய மெமரி கார்ட் மற்றும் 64 MB RAM வசதி

சிவப்பு, பச்சை, சியான், மஞ்சள், கருப்பு மற்றும் வெள்ளை ஆகிய வண்ணங்கள்

முன் கூட்டியே நிறுவப்பட்ட பேஸ்புக், டுவிட்டர் பயன்பாடுகள்

மேலும், ஆஷா போன் வாடிக்கையாளர்களுக்கு உறுதி அளிக்கும் விதமாக பேஸ்புக்குடன் நோக்கியா நிறுவனம் கூட்டு வைத்திருப்பதால் படங்களை நேரடியாக பேஸ்புக்கில் பகிர்ந்துக்கொள்ளலாம். இத்துடன் Nokia Xpress Browser வசதியும் உள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் இந்திய மொழிகளான ஹிந்தி, மலையாளம், தமிழ் என பல்வேறு மொழிகளிலும் கீபோர்டு இருக்கிறது. நோக்கியா ஆஷா 501 வரும் ஜூனில் மார்க்கெட்டில் ரூ.5,347 என்ற விலையில் களமிறங்க இருக்கிறது.

பேஸ்புக்குடன் கூட்டு வைத்திருப்பதால் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக நோக்கியா ஆஷா 501 இருக்கும் என்று நோக்கியா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் எலோப் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

Tags: ,