ஊடகங்களின் கழுத்தை நெரிக்க முடியும் – டக்ளஸ்

daklach
“என்னால் ஊடகங்களின் கழுத்தை நெரிக்கவும் முடியும்;  ஊடகங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் முடியும்” என்று தெரிவித்தார் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா.

யாழ். நகரில் நேற்று நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் பத்திரிகையாளர்களைத் தனியே அழைத்து அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடகடல் நிறுவனத்தின் புதிய இயந்திரங்களின் பணிகளைத் தொடக்கி வைக்கும் நிகழ்வு நேற்று நடந்தது. அதன் பின்னர் பத்திரிகையாளர்களைத் தனியே அழைத்துப் பேசினார் அமைச்சர்.

வடமாகாண தேர்தல் மற்றும் வலி.வடக்கு மீள்குயமர்வு என்பன குறித்துத் தனது வழமையான கருத்துக்களைத் தெரிவித்த அமைச்சர்டக்ளஸ், தனது பேச்சை ஒலிப்பதிவு செய்வதை நிறுத்துமாறு ஊடக வியலாளர்களிடம் தெரிவித்த பின்னர் மிரட்டல் பாணியில் கருத்துத் தெரிவித்தார்.

“என்னுடன் கதைத்து விட்டு வேறு ஏதாவது எழுதினால் என்னால் உடனடியாக நடவடிக்கை எடுக்க இயலும்; கழுத்தையும் நெரிக்க இயலும்” என்றார் அமைச்சர்.
அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களிடம் அமைச்சரின் கருத்து கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் வைத்து பகிரங்கமாகத் தாம் மிரட்டப்பட்டமை ஊடக சுதந்திரத்திற்கு அமைச்சரால் விடுக்கப்படும் அச்சுறுத்தல் என்று அவர்கள் கூறினர்.

-uthayan

Tags: