ராமதாஸ் மேலும் இரு வழக்குகளில் கைது

ramadasபாமக நிறுவுனர் ராமதாஸ் மீது மேலும் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, அந்த வழக்குகளில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாமல்லபுரத்தில் சென்ற ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசியபோது, வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகவும், இந்த மாமல்லபுரம் கூட்டத்திலும் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாகவும் அவர் மீது இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. திருக்கழுக்குன்றம் நீதிபதி சிவா உத்தரவின் பேரில் ராமதாஸை மே 17 வரை காவலில் வைத்துள்ளனர். மேலும் மதுரையில் கடந்த 2004ல் பாபா பட வெளியீடு நேரத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசிய வழக்கிலும் மதுரை ஜே.எம். நீதிமன்ற உத்தரவு பெற போலீசார் முயன்றனர். பின்னர் திருச்சி ஜே.எம். நீதிமன்ற நீதிபதி ராஜராமன் ராமதாஸைக் கைது செய்வதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.

Tags: ,