புத்திசாலி பிச்சைக்காரன்

poor-man
ஒரு குருட்டு பிச்சைக்காரன் உணவுக்காக பிச்சை கேட்டபடி நடந்து கொண்டிருந்தான். அவன் சிறந்த புத்திசாலி ஆனால் அதை பயன்படுத்தி ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற கவலை அவன் மனதில் உண்டு. பசி மயக்கத்துடன் ஓரிடதில் அமர்ந்தான்.

அவன் மீது இரக்கம் கொண்ட ஒரு தேவதை அவன் முன்னால் வந்து உனக்கு என்ன வரம் வேண்டும் என கேட்டது.

மகிழ்ச்சியோடு அவன் வாய் திறந்தபோது தேவதை சொன்னது. பொறு ! பொறு !. உனக்கு ஒரே ஒரு வரம் தான் தருவேன் அதையும் நீ ஒரு வாக்கியத்தில் தான் கேட்க வேண்டும்.

அவன் பதறவில்லை தடுமாறவில்லை. தேவதை பிரமித்து போகும்படி அந்த வரத்தை கேட்டான் அது…. !!

”என் வீட்டு மூன்றாவது மாடியிலிருந்து தோட்டத்தில் என் குழந்தை விளையாடுவதை பார்க்கும் வரம் வேண்டும்”

நீதி: புத்திசாலிகள் எந்த சூழ்நிலையிலும் சிறப்பையே அடைவார்கள்.

Tags: ,