ஆசிரியர்: நான் உனக்கு முதலில் இரண்டு கோழிகள் தருகிறேன். அடுத்து இரண்டு கோழி தருகிறேன். இப்ப உன்கிட்டே எத்தனை கோழி இருக்கும்?
மாணவன்: 5 இருக்கும் சார்!
ஆசிரியர்: நல்லா கேளு….. முதல்லே இரண்டு கோழிகள் தர்றேன், மறுபடியும் இரண்டு தர்றேன், இப்ப உன்கிட்டே எவ்வளவு இருக்கும்?
மாணவன்: 5 தான் சார்.
ஆசிரியர் (பெருமூச்சு விட்டவாறு): உஷ்….முடியலடா. சரி, இதுக்குப் பதில் சொல்லு. முதல்லே இரண்டு ஆப்பிள் தர்றேன். அடுத்து ரெண்டு ஆப்பிள் தர்றேன். மொத்தம் எத்தனை ஆப்பிள் இருக்கும்?
மாணவன்: 4 சார்.
ஆசிரியர்: தப்பிச்சேன்…. இப்ப கோழிக்கு வருவோம் , 2 கோழிகள் தர்றேன். பிறகு 2 கோழிகள் தர்றேன். உன்கிட்டே மொத்தம் எத்தனை கோழிகள் இருக்கும்?
மாணவன்: 5 சார்.
ஆசிரியர்: அடேய் லூசுப்பயலே….. எப்படிறா 5 கோழிகள் வரும்?
மாணவன்: என்கிட்டே ஏற்கனவே வீட்டில் ஒரு கோழி இருக்கு சார்.
ஆசிரியர்: ? ? ?
-நன்றி: சாளரம்