Archive: Page 2
இனவெறி ஆட்சியை எதிர்த்து போராடிய நெல்சன் மண்டேலா மீண்டும் வைத்தியசாலையில்
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் தலைவர் நெல்சன் மண்டேலா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படடுள்ளார். நுரையீரலில் கிருமித் தொற்று காரணமாகவே அவர் வைத்தியசாலையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.. இனவெறி ஆட்சியை எதிர்த்து போராடிய மண்டேலா சிறையில் இருந்த இருபத்து ஏழு ஆண்டு காலத்தில் அவருக்கு காசநோய் ஏற்பட்டிருந்தது.வெள்ளையின… Read more
13 ஐ செயற்படுத்த இந்தியா தயங்காது; அடித்துக் கூறுகிறார் நாராயணசாமி
“ராஜீவ் காந்தியும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் செய்துகொண்ட உடன்படிக்கையின்படி வந்த 13ஆவது அரசமைப்புத் திருத்தத்தின் அனைத்து அம்சங்களும் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும். இதில் இந்தியா மிக உறுதியாகவும், தெளிவாகவும் இருக்கிறது.”
பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற மகிந்த ஏன் சிங்கள மக்களின் ஆதரவுடன் பிரச்சனையை தீர்க்க முடியவல்லை! தீர்வுக்கு நாம் தயார்!- தமிழ் தேசியக் கூட்டமைப்பு
தமிழ் மக்களின் ஆதரவுடன் நான் தீர்வுக்கு செல்லத் தயார். ஆனால் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்ற மகிந்த ஏன் மக்களின் ஆதரவுடன் தீர்வுக்கு வரவில்லை எனவும் சம்பந்தனும், ராஜபக்ஷவும் ஓர் உடன்பாட்டுக்கு வருவதாக இருந்தால் நிச்சயம் அது ஒரு நியாயமான தீர்வாகத்தானே… Read more
வெளிநாட்டில் இருந்து வந்தவரின் மரணத்தில் சந்தேகம்! முறைப்பாட்டையடுத்து பொலிசார் விசாரணை!
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வெளிநாட்டில் இருந்துவந்த ஒருவர் 10 நாட்களில் இறந்தது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
எமக்கும் நியமனம் வழங்குங்கள் என வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டம்
ஒப்பந்த அடிப்படையில் வவுனியா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற தாம் சிற்றூழியர்களாக பணியாற்றும் போதிலும் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாது புதியவர்களுக்கு நியமனம் வழங்குவதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலை சிற்றூழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
704 அரச உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது
வன்னி பிராந்தியத்தில் உள்ள வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கிளல் உள்ள அரச திணைக்களங்களில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 704 பேருக்கு இன்று (8.6) வவுனியா நகரசபை மண்டபத்தில் அரச நியமனங்கள் வழங்கப்பட்டன.
இந்து ஆலயங்கள் மீது தொடரும் அடாவடி! விநாயகர் ஆலய கோபுரத்தின் 13 பாவைகள் இனந்தெரியாதோரால் உடைப்பு!
திருகோணமலை, திருஞானசம்பந்தர் வீதியில் உள்ள கற்பக விநாயகர் ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கோபுரத்தில் 13 பாவைகள் இனம்தெரியாதவர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கலாம் என்றும் இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் ஆலய பரிபாலனசபையின் செயலாளர் எ.நடராசா தெரிவித்தார். இதேவேளை… Read more
தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை நசுக்குவதற்கு இந்தியா எந்தக் கோலை பயன்படுத்தியது? தமிழ் மக்களை ஏமாற்றுவதாக சாடுகிறார் அரியம் எம்.பி
தமிழர்களுக்கு அரசியல் தீர்வு வழங்குவதற்கான மந்திரக்கோல் தங்களிடமில்லை என்று கூறும் இந்தியா தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை அழித்தொழிப்பதற்கு எந்தக் கோலை பாவித்திருந்தது? யுத்தத்தினை அழித்தவர்கள் தீர்வினை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற… Read more
விஜயின் ஒரு கோடி ரூபா நலத்திட்டம் ரத்தானது ஏன்? : வெளியானது பரபரப்புத் தகவல்கள்
நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெறவிருந்து ஒரு கோடி ரூபா நலத்திட்டம் ரத்தானது ஏன்? பரபரப்பான தகவல்கள் இந்திய ஊடகங்களில் வெளியாகியுள்ளது. >விஜய்க்குள் இருக்கும் அரசியல்வாதியின் முகத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதற்காக நலத்திட்டங்களை விஜய் மேற்கொண்டு வருகிறார் என… Read more
அந்தரங்க உறுப்புகளில் மிளகாய் தூளை கொட்டி விசாரணை செய்யும் இலங்கை பொலிஸ்!- ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு
இலங்கை பொலிஸ் விசாரணைகளின்போது, மிளகாய் பொடியை கண்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் கொட்டுதல் போன்ற மோசமான சித்திரவதை முறைகளைக் கையாள்வதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டுகிறது.